விஜய் சேதுபதி என் படத்தை பார்க்கவில்லை – நடிகர் அசோக் செல்வன்

அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் ‘வேழம்’. இந்த படத்தில் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), சங்கிலி முருகன் மற்றும் மராத்தி நடிகர் மோகன் அகாஸ்தே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே 4 கிரியேஷன்ஸ் சார்பில் கேசவன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஆர்.ஜானு சாந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளதை அடுத்து இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இதையடுத்து ‘வேழம்’ படக்குழுவினர் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளனர். ‘வேழம்’ படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். “இந்த படத்தில் இருக்கும் முக்கிய மூன்று கதாபாத்திரங்களும் கண்டிப்பாக கதைக்கு தேவை என்பதற்காக தான் இயக்குனர் வைத்துள்ளார்.

ஒரு கதாபாத்திரம் கூட கதைக்கு தேவையில்லை என்று இருக்காது. எங்கள் படக்குழு விஜய் சேதுபதியிடம் போஸ்டரை ரிலீஸ் செய்ய கூறியுள்ளனர். உடனே அதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். மற்றபடி அவர் என் படங்களை எல்லாம் பார்க்கவில்லை. எனக்கு தெரிந்து அவர் படத்தை பார்ப்பதற்கே அவருக்கு நேரம் இருக்காது” என்று அசோக் செல்வன் கூறியுள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!