வெங்கட் பிரபு இயக்கத்தில் இணையும் அஜித், விஜய் – கங்கை அமரன் தகவல்

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’, ‘மன்மத லீலை’ போன்ற படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் இணையும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் குமாரின் மங்காத்தா படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் செய்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.


இதையடுத்து ரசிகர்கள் அஜித்தும் விஜய்யும் இணைந்து நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், விஜய் இருவரும் இணைந்து நடிக்க ஒரு கதையை உருவாக்கி உள்ளதாகவும், இப்படம் பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் எனவும் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!