ராதிகாவை ஏன் அம்மா என கூப்பிடனும், அவர் எனக்கு Aunty தான்.. வரலக்ஷ்மி அதிரடி பேட்டி

நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் தான் ராதிகாவை அம்மா என கூப்பிடமாட்டேன் என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

அவர் கூறியதாவது..
மக்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். ராதிகா என் அம்மா என்று தான் பலரும் நினைகிறார்கள். ஆனால் அவர் என் அம்மா இல்லை. அவர் என் அப்பாவின் இரண்டாம் மனைவி அவ்வளவு தான்.

அதற்காக நான் ராதிகா ஆன்டியை வெறுக்கிறேன் என்றில்லை. எங்களுக்கு நடுவில் நல்ல புரிதல் இருக்கிறது. அவரை ஏன் aunty என கூப்பிடுகிறேன் என பலரும் கேட்பார்கள்.

ஏனென்றால் அவர் என் அம்மா இல்லை. என்னுடைய உண்மையான அம்மா தான் எனக்கு அம்மா. அதனால் ராதிகா எனக்கு aunty தான். ஆனாலும் அவர்கள் இருவரையும் ஒரே அளவுக்கு மதிக்கிறேன்.

இவ்வாறு வரலக்ஷ்மி சரத்குமார் தெரிவித்து இருக்கிறார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!