ரஜினியை சந்தித்ததை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகின்றேன்..!! பிரதமரின் அதிரடி டுவிட்..!!


சூப்பர் ஸ்டார் ரஜினியை ஒரு முறையாவது தரிசித்து விட வேண்டும் என்பது தமிழர்கள் மட்டும் அல்லாது இந்தியர்களின் லட்சியமாக இருக்கும்.

தற்போது அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், அவரை சந்திக்க முக்கிய பிரமுகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் கலந்து கொண்டார்.


இதற்காக மலேசியா சென்ற ரஜினிகாந்த்தை பல முக்கிய பிரமுகர்கள் போட்டி போட்டு சந்தித்தனர்.

அதே போல மலேசிய பிரதமர் நசீப் ரசாக்கும் சந்தித்தார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தலைவர் ரஜினியை மீண்டும் அதுவும் மலேசியாவில சந்திப்பதில் மிகப்பெரிய மகிழ்ச்சி.

அவர் மலேசியாவில் மகிழ்ச்சியாக தங்கி இருக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!