வருங்கால கணவரை அறிமுகம் செய்த பிரபல நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை பூர்ணா சமூக வலைதளத்தின் மூலம் வருங்கால கணவரை அறிவித்துள்ளார்.

பரத் நடிப்பில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூர்ணா. தமிழில் பிசாசு-2, கந்தக்கோட்டை, காப்பான், ஆடுபுலி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் சில வெப்சீரிஸ்களில் நடித்து ரசிகரகளை கவர்ந்தார். 

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணாவிற்கு அண்மையில் இருவீட்டாரின் சம்மத்தத்துடன் நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில், தனது வருங்கால கணவர் ஆசிப் அலியுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், என் பெற்றோரின் ஆசியுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெர்வித்து வருகின்றனர். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!