15 வயதிலே வீட்டைவிட்டு வெளியேறி கஷ்டப்பட்டேன் – பியா பாஜ்பாய்-ன் மறுபக்கம்..

பியா பாஜ்பாய்-ன் மறுபக்கம்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பியா பாஜ்பாய், இவர் தமிழில் ஏகன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து கோவா, கோ உள்ளிட்ட படங்களில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் நடிகை பியா.

இந்நிலையில் நடிகை பியா பாஜ்பாய் நிகழ்ச்சி ஒன்றில் தனது வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில் “எனக்கு 15 வயது இருக்கும் போது வீட்டைவிட்டு வெளியேறி டெல்லி சென்றேன், தூங்குவதற்கு இடம் இல்லாமல் 2 இரவு டெல்லி ரயில் நிலையத்திலேயே தூங்கினேன்.  

பின் எப்படியோ மும்பை சென்று, வீடு கிடைக்காமல், ஒரு வீட்டின் உரிமையாளரின் நாய் இருக்கும் அறையில் அந்த நாய்யுடன் 9 மாதங்களுக்கு மேல் தங்கினேன். ஆனால் எல்லா போராட்டத்துக்கு பிறகும் நிச்சயம் நல்லது நடக்கும்” என பேசியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!