நடிகை ஆண்ட்ரியாவுக்கு திருமணம் செய்வதில் இப்படி ஒரு பிரச்சனையா?- என்ன சோகம் இது

நடிகை ஆண்ட்ரியா 2005ம் ஆண்டு கண்டநாள் முதல் படத்தில் சின்ன ரோலில் நடித்தார். முதலில் பின்னணி குரல் கொடுப்பவராக தான் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறது.

பின் நடிகையாக மாறி பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் படங்கள் மூலம் அதிகம் கவனிக்கப்பட்டார். வடசென்னை, மங்காத்தா, விஸ்வரூடம், வட சென்னை என பெரிய நடிகர்களின் படங்களில் முக்கிய ரோலில் நடித்து மக்களால் அதிகம் பேசப்பட்டார்.

ஆண்ட்ரியா சந்தித்த துயரம்
சினிமாவில் வெற்றி நாயகியாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் பெரிய துயரத்தை சந்தித்திருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் ஒருவரால் தனது வாழ்க்கை சீரழிந்து விட்டதாகவும், அதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று கூறியிருந்தார்.

அந்த ஒருவர் ஒரு அரசியல் வாதி என்ற விவரம் மட்டும் வெளியாகி இருந்தது.

திருமணம் குறித்து ஆண்ட்ரியா
இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியாவிடம் திருமணம் குறித்து ஒரு நிகழ்ச்சி கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதில் அவர், நானே கேட்கிறேன், ‘ஆண்ட்ரியாவுக்கு எப்போது கல்யாணம்?’ ஆனா, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க.

கல்யாணம் பண்ண வேண்டும் என்பதற்காக ஒருத்தரை திருமணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!