செல்வராகவனுடன் விவாகரத்து குறித்து முதன்முறையாக பேசிய நடிகை சோனியா அகர்வால்

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். வித்தியாசமான படைப்புகளை கொடுத்து மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளார்.

செல்வராகவன் பயணம்
ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் இயக்குனர் ஆனார். அடுத்தடுத்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களை அடுத்தடுத்து இயக்கி வந்தார்.


செல்வராகவன்-சோனியா அகர்வால்
படங்களுக்கு இடையில் சோனியா அகர்வாலுடன் செல்வராகவனுக்க காதல் ஏற்பட இருவரும் திருமணமும் செய்துகொண்டார்கள். 2006ம் ஆண்டு திருமணம் செய்த அவர்கள் 2010ம் ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள்.

விவாகரத்து குறித்து சோனியா அகர்வால்
செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றியபோது அவரது கடின உழைப்பு எனக்கு பிடித்து போக காதலித்தோம். பின் இருவரும் காதலிக்க ஆரம்பித்தப் பிறகு திருமணமும் செய்து கொண்டாம்.

ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அதே போல விவாகரத்து செய்யும் போதும் கொஞ்சம் மனவலி உடனேயே இருவரும் பிரிந்தோம் என்று கூறுகிறார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!