விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் குறித்து முதன்முறையாக கூறிய நடிகை ராஷ்மிகா

சினிமாவில் படம் வெற்றிப் பெற்றுவிட்டால் அதில் நடித்த ஜோடியை எப்போதும் ரசிகர்கள் சேர்த்து வைத்து பேசுவார்கள்.

அப்படி தெலுங்கு சினிமாவில் வந்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் கோவரெட் படத்தில் ஜோடியாக நடித்து ஹிட் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா.

இவர்கள் இருவரும் நிஜத்தில் காதலிக்கிறார்கள், விரைவில் திருமணம் என வதந்திகள் அதிகம் பரவி வருகிறது. இதுகுறித்து விஜய் தேவரகொண்டா, மீண்டும் வரும் முட்டாள் தனமான செய்தி, இதில் உண்மை இல்லை என டுவிட்டரில் கூறியிருந்தார்.

தற்போது இந்த திருமண செய்தி குறித்து ஒரு பேட்டியில் ரஷ்மிகா, இது டைம் பாஸ் வதந்தி, எனக்கு திருமணம் செய்ய நிறைய நேரம் இருக்கிறது, அதற்கான நேரம் வரும் போது திருமணம் செய்வேன் என பேசியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!