வாடிவாசல் மற்றும் பாலா திரைப்படம் குறித்து நடிகர் சூர்யாவே கொடுத்த அப்டேட்ஸ்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பிரஸ் மீட் இன்று காலை நடைபெற்றது, இதில் இப்படத்தின் புதிய ட்ரைலரை வெளியிட்டு இருந்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர்கள் உடன் கலந்து கொண்ட சூர்யா பல விஷயங்களை ரசிகர்களிடம் தெரிவித்து இருந்தனர்.

சூர்யா கடைசியாக தனது திரைப்படங்கள் குறித்த அப்டேட்ஸ்களையும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். அதன்படி இதோ ஆரம்பித்துவிட்டோம் வாடிவாசல் ஆரம்பிச்சிட்டோம், பாலா அண்ணா படமும் ஆரம்பித்துவிடுவோம் அதை பற்றி பிறகு பேசலாம்” என தெரிவித்து இருந்தார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!