விஜய் வீட்டில் யுவன் வெறியன்

திரைத்துறையில் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து யுவன் சங்கர் ராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் பற்றி பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவர் திரைத்துறையில் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் குறித்து பேசினார்.

யுவன் பேசியதாவது, விஜய்யின் மகன் சஞ்சய் யுவனிசம் என்று பெயர் எழுதிய டி.சர்ட் அணிந்த புகைப்படத்தை விஜயின் மேலாளர் எனக்கு அனுப்பி வைத்தார். அதன்பின் விஜய்யை சந்தித்த போது என் வீட்டில் யுவன் சங்கர் ராஜாவின் வெறியன் இருக்கிறார் என்று என்னிடம் சொன்னார். அது என்னால் மறக்க முடியாது’ என்றார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!