தமிழ் சினிமாவில் தனது அபார நடிப்பு திறமையால் தனகென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய்.
தனது திறமையால் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மழை பொழிகிறது.
விஜய் நடிப்பு மட்டுமின்றி சமூக அக்கறையிலும் தான் நடிப்புக்கு வந்த காலம் முதல் ஈடுபட்டு வருகிறார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
இந்நிலையில் நடிகர் விஜய் பற்றி தியேட்டர் சங்க தலைவரான அபிராமி ராமநாதன் ஒரு பரபரப்பு தகவலை கூறியிருக்கிறார்.
ஆறாம் திணை படத்தின் விழாவில் கலந்துகொண்ட அபிராமி ராமநாதனன் பேசியதாவது.
சில தயாரிப்பாளர்கள் படம் வெளிவந்த 10 அல்லது 15 நாட்களில் படங்களை அமேசானுக்கு கொடுத்து விடுகிறார்கள்.
இதனால் திரையரங்க உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர். எனவே தயவு செய்து உரிமையாளர்கள் ஒரு வருடம் கழித்து கொடுங்கள் என கூறியுள்ளார்.
மேலும் இன்று பிரபலமாக இருக்கும் விஜய்யின் படமெல்லாம் ஒரு காலத்தில் சிறு பட்ஜெட் படமாக தான் இருந்தது.
அதை நாங்கள் தான் தியேட்டரில் ஓட வைத்து வெற்றி படமாக்கினோம்.
அதனால் தான் விஜய் இன்று இவ்வளவு பிரபல நடிகராக உள்ளார். இது மற்ற நடிகர்களுக்கும் பொருந்தும் என்று அபிராமி நாதன் தெரிவித்தார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!