ஆம்.. அடுத்து அவர் இயக்கத்தில் நடிக்கிறேன்! தனுஷ் அறிவித்த புது படம்

நடிகர் தனுஷ் நடிக்க உள்ள புது படங்கள் பற்றிய அறிவிப்பு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே அவரது பல படங்கள் லைனில் இருக்கும் நிலையில் நேற்று அவர் தெலுங்கு/தமிழ் பைலிங்குவல் படம் ஒன்றை அறிவித்தார்.

வாத்தி என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படத்தின் போஸ்டர்கள் நேற்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு புது படத்தை தனுஷ் உறுதி செய்து இருக்கிறார்.

ராக்கி, சாணி காயிதம் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தான் தனுஷ் நடிக்க இருக்கிறார். இது பற்றி செய்திகளை முன்பே கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தனுஷ் அதை உறுதியாக அறிவித்து இருக்கிறார்.

“ஆம், அது உண்மை தான். அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்த படத்தை கைப்பற்றிய அதிர்ஷ்டசாலி நடிகர் நான் தான். மேலும் தகவல்கள் விரைவில். ஓம் நமசிவாயா” என தனுஷ் ட்விட் செய்து இருக்கிறார்.

அதற்கு நன்றி கூறி இருக்கும் அருண் மாதேஸ்வரன் “என்னை நம்பியதற்கு மிக்க நன்றி. உங்கள் வார்த்தைகள் எனக்கு கிடைத்த பெருமை. இங்கு நான் தான் அதிர்ஷ்டசாலி. இந்த பெரிய journey காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டு இருக்கிறார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!