மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த இரண்டு திரைப்படங்கள், என்னென்ன தெரியுமா?

கன்னட திரையுலகின் உச்ச நட்சத்திரம் புனித் ராஜ்குமார், 46 வயதான இவர் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

அவரின் திடீர் மறைவு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் பெங்களூருவில் திரண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் நடிப்பில் கடைசியாக உருவான திரைப்படங்களில் ஒன்று ஜேம்ஸ், இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த புனித், டப்பிங் மட்டும் கொடுக்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக அவரின் அண்ணன் சிவராஜ்குமார் டப்பிங் கொடுப்பார் என தகவல் வெளியானது.

மேலும் ஜேம்ஸ் திரைப்படம் அடுத்த வருடம் மார்ச் மாதம் புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடக கடற்பகுதி குறித்த ஆவணப்படத்தையும் தயாரித்து நடித்து வந்தார் புனித் ராஜ்குமார். புனித் அப்படத்தின் இயக்குனருடன் கர்நாடகாவில் உள்ள வனப்பகுதிகளுக்கும் கடற் பகுதிகளுக்கும் சென்று அந்த ஆவணப்படத்தை எடுத்தனர்.

‘கந்தட குடி’ என பெயரிடப்பட்டுள்ள அந்த ஆவணப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!