90-ஸில் கோடியில் சம்பளம் வாங்கி ரஜினி, கமலை ஓரங்கட்டிய ஒரே நடிகர் இவர் தான்..

திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின், ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜ்கிரண்.

கஸ்தூரிராஜா இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதன்பின், மக்களுக்கு பிடித்தவாறு பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து, முன்னணி நட்சத்திர அந்தஸ்தை பிடித்தார்.

1996ஆம் ஆண்டு கே வி பாண்டியன் இயக்கத்தில் மாணிக்கம் படத்தில் ஹீரோவாக ராஜ்கிரண் கமிட்டானார்.

இந்நிலையில் இப்படத்திற்காக தான் ராஜ்கிரண் ரூ. 1 கோடியே, 10 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி, கமலுக்கு முன்பே ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளமாக வாங்கி ஒரே நபர் நடிகர் ராஜ்கிரண் என்று தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.