நடிகர் சூர்யா செய்த காரியத்தால் கண்ணீர் விட்டு அழுத மேக்கப்மேன்

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தாலும் இன்னொரு தரப்பு மக்களிடம் இருந்து கடும் கண்டனங்களை எதிர்கொண்டு வருகிறது.

எனினும் மக்களின் ஆதரவால் படம் இன்னும் பலரால் புகழ்ந்து பேசப்பட்டு தான் வருகிறது.
இது ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் படப்பிடின்போது நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம் குறித்து எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் சூர்யாவை குறித்து புகழ்ந்து பதிவிட்டிருக்கும் சந்திரா, ஒரு முறை மேக்கப்மேன் ஒரு சின்ன குழந்தைக்கு பணி நிமித்தமாக ஒரு தவறைச் செய்துவிட்டார்.

கொஞ்சம் விட்டிருந்தால் அது ஆபத்தில் முடிந்திருக்கும். பதட்டத்தில் சூர்யா சார் மேக்கப் மேனிடம் ஏங்க பார்த்து செய்யமாட்டிங்களா என கொஞ்சம் குரலை உயர்த்தி சொல்லிவிட்டார்.

ஆனால் அடுத்த நாளே வந்து அப்படி பேசியதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார் சூர்யா இதனை கேட்டு கண் கலங்கி அழுதுவிட்டார் மேக்கப்மேன் என பகிர்ந்து ஜெய் பீம் படத்திற்கான தனது ஆதரவை WeStandWithSuriyaa என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருக்கிறார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!