சூர்யாவை அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என கூறிய பாமக நிர்வாகி மீது வழக்கு பதிவு!

ஜெய் பீம் திரைப்படம் குறித்த விவகாரம் தினமும் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
மேலும் ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் ஜெய் பீம் படத்திற்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே சமீபத்தில் நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ₹1 லட்சம் பரிசு என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி கூறியிருந்தது பெரிய சர்ச்சையாக மாறியது.

இந்நிலையில் தற்போது அந்த பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!