பிரபல நடிகையின் கணவருக்கு இப்படியொரு நிலைமையா..!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!


மலையாள முன்னணி நடிகரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான பகத் பாசில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் பிறந்தவர் நடிகை நஸ்ரியா, இவர் மழலை நட்சத்திரமாக நடித்து, தொகுப்பாளராக பரிணமித்து பின்பு தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர்.

இவரது நடிப்பில் வெளியான ஓம் சாந்தி ஓஷானா, பெங்களூர் டேய்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மலையாளத்திலும், நேரம், ராஜா ராணி போன்ற பல தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்து அதிகப்படியான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர்.


தொடர்ந்து குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா, மலையாள முன்னணி நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், மலையாள நடிகரும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான பகத் பாசிலிடம் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ்ராய் கார் உட்பட பல சொகுசு கார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கார் வாங்கியதில் ஏய்ப்பு செய்ததன் புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். காரை முறைகேடாக பதிவு செய்ததாக கூறி அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பகத் பாசில் விசாரணைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!