துப்பாக்கி படத்திற்கு முதன் முதலாக வைத்த டைட்டில் என்ன தெரியுமா, கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் அரசனாக தற்போது இருந்து வருவது விஜய் தான்.

படம் நன்றாக இருக்கின்றதோ, இல்லையோ இவர் படங்களுக்கு கூட்டம் அலை மோதுகின்றது.

இந்நிலையில் விஜய்-முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி படத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.

அந்த படம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது, இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. காட்சிக்கு காட்சி அனல் பறக்கும், ஆனால், இப்படத்திற்கு முதன் முதலாக வைத்த டைட்டில் என்னவென்று கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க.

ஆம், துப்பாக்கி படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் “மாலை நேரத்து மழைத்துளி” என்று டைட்டில் வைத்தார்களாம். ஒருவேளை முதலில் காதல் படமாக எடுக்கலாம் என்று நினைத்து பிறகு ஆக்‌ஷன் கதை மாறியதால் துப்பாக்கி என்று வைத்திருப்பார்கள் என்று கூறப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!