‘நரகாசூரன்’ படத்தை ஓடிடி-யில் வெளியிடுவதிலும் நீடிக்கும் சிக்கல்?

கார்த்திக் நரேன் – அரவிந்த் சாமி கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘நரகாசூரன்’ படத்தை ஓடிடி-யில் வெளியிட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘நரகாசூரன்’. கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீசாகாமல் முடங்கிக் கிடந்தது.

இதனிடையே அண்மையில், இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட முயற்சி நடப்பதாகவும், ஆகஸ்ட் 13-ந் தேதி இந்தப் படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டது. ஆனால் அதற்கும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பைனான்சியர்களிடம் இருந்து இந்தப் படத்திற்கான செட்டில்மென்ட்டை முடித்து தடையில்லா சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது. அதனால் வருகிற ஆகஸ்ட் 13-ந் தேதி ‘நரகாசூரன்’ வெளியாவது சந்தேகம் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!