இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்தப்படம் இப்படிபட்ட கதையா?- எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்

இயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமா முக்கியமாக கவனிக்கும் ஒரு படைப்பாளி. இதுவரை இவர்கள் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டது.

நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கான டிரைலர் கூட அண்மையில் தான் வெளியாகி இருந்தது.

டிரைலரை பார்த்த அனைவரும் படக்குழுவிற்கு வாழ்த்து கூறி வந்தனர்.

இப்படம் குறித்து பா.ரஞ்சித் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், தனது அடுத்த படம் நட்சத்திரம் நகர்கிறது என்று கூறியுள்ளார்.

இது காதல் கதை என்றும், அட்டகத்தி பிறகு தான் இயக்கும் காதல் கதை என கூறியிருக்கிறார். பா.ரஞ்சித்திடம் இப்படிபட்ட கதை வருகிறது என்றதும் ரசிகர்கள் பெரிய ஆவலில் உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!