வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படம், முதலில் தளபதி விஜய்க்கு சொன்ன கதையா!

இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர், இவர் இயக்கத்தில் பல ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இவர் இயக்கிய மங்காத்தா, சென்னை 28, கோவா, சரோஜா உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

மேலும் தற்போது இவர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பிரியாணி, சூப்பர் ஹிட்டான இப்படத்தில் கார்த்தி நடித்திருப்பார்.

ஆனால் இந்த படத்தின் கதையை முதலில் வெங்கட் பிரபு தளபதி விஜய்யிடம் தான் கூறினாராம், அவர் காத்திருக்கும் படி கூறியதால் இந்த கதையை கார்த்திக்கு கூறி ஓகே செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!