நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள், இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பெரிய வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து அவர் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சூர்யா நடிப்பில் கடைசியாக சூரரை போற்று திரைப்படம் வெளியானது, இவர் அடுத்ததாக சூர்யா 40 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சூர்யாவின் அயன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சூர்யா ஒரு சுவாரஸ்யமான் விஷயத்தை கூறியிருந்தார்.
ஆம் நடிகர் விஜய் அயன் படத்தில் உள்ள விழிமூடி யோசித்தால் பாடலை கேட்டுவிட்டு, “மாப்பு என்ன பாட்டு டா அது, சூப்பரா மாப்பு” என சூர்யாவிற்கு SMS செய்தாராம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!