நடிகையால் வாழ்க்கையை இழந்த நடிகர்..!! இப்ப எப்படி இருக்காருனு தெரியுமா..?


1982 ஆம் ஆண்டு ‘பயணங்கள் முடிவதில்லை’ என்கின்ற படத்தின் மூலம் நடிகர் மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த காலகட்டத்தில் ரஜினி-கமல் இருவரும் கொடிகட்டி பறந்தனர். அவர்கள் இருவருக்கும் போட்டியாக மோகன் விளங்கினார்.

அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகர் விருதை மோகன் பெற்றார். இவரை ‘மைக் மோகன்’ என்று அழைத்தனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அதற்கு காரணம்., அதிகப்படியான படங்களில் அவர் மைக்கில் பாடுவதை போன்ற சீன்கள் அமைந்திருந்தது.


ஒரு நாளைக்கு 16 மணி நேரம் நடிப்பிற்காக செலவிட்டார். குறுகிய காலகட்டத்தில் அவர் 70 மேற்பட்ட படங்களில் நடித்தார்.

அந்த நேரத்தில் மோகனை ஒரு நடிகை காதலித்து வந்துள்ளார். ஆனால்., அந்த நடிகையின் காதலை மோகன் ஏற்கவில்லை.

அதற்காக அந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா..?

நடிகர் மோகனுக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக ஒரு பொய்யான தகவலை திரைத்துறையில் பரப்பி விட்டிருக்கிறார்.

இதனால்., அன்றிலிருந்து மோகனை எந்த ஒரு நடிகையும் தங்களுடைய பக்கத்தில் கூட சேர்க்கவில்லை. மோகன் படம் என்றால் நடிகைகள் விலக துவங்கினர்.


இதனால் இயக்குனர்களும் தயாரிப்பாளரும் இவரைக் கண்டு தெரித்து ஓடத் துவங்கினார்கள்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூட மோகனைக் கண்டு பயந்து ஜன்னலை சாத்தி கொண்டனர். இதனால் மோகன் விரக்தி அடைந்தார். சில நாட்கள் வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் மோகன் சென்றுவிட்டார்.

இந்த விஷயங்களை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 61 வயதாகும் மைக் மோகன் தற்போதும் ஆரோக்கியமாகதான் உள்ளார். ஆனால்., ஒரு நடிகையின் வதந்தியால் “தனது வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறார்.”

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!