நயன்தாராவுடன் திருமணம் எப்போது? – ஓப்பனாக சொன்ன விக்னேஷ் சிவன்

இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கைவசம் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை நயன்தாரா ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்பது குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், ‘ஏன் நீங்கள் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், “திருமணத்துக்கு ரொம்ப செலவு ஆகும். அதனால் அதற்கான பணத்தை சேர்த்துவிட்டு, கொரோனா அச்சுறுத்தல் எல்லாம் நீங்கிய பிறகு திருமணம் செய்து கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!