விஜய்க்கு எழுதப்பட்ட கதையில் கார்த்தி நடித்துள்ளாரா?- என்ன படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் ரசனையை உணர்ந்து படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் சிலர் உள்ளார்கள்.

அதில் முக்கியமாக வெங்கட் பிரபு இடம் பெறுகிறார், அவர் இயக்கும் படங்கள் எல்லாமே யங் ஏஜ் சினிமா ரசிகர்களை ரசிக்க வைக்கும் வகையிலேயே இருக்கும்.

அப்படி அவர் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய படம் பிரியாணி. பெரிய எதிர்ப்பார்ப்பில் படம் ரிலீஸ் ஆக சரியான வரவேற்பை பெறவில்லை.

இந்த கதை முதலில் நடிகர் விஜய்க்கு தான் எழுதப்பட்டதாம். அவரை வைத்து தான் முதலில் கதையையே வெங்கட் பிரபு எழுதியுள்ளார், தளபதியிடமும் ஒன் லைன் கூறியிருக்கிறார்.

ஆனால் அவர்கள் இருவரும் இணைய அப்போது நேரம் சரியாக வரவில்லை, எனவே அப்படத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!