கே.ஜி.எப். இயக்குனரின் படத்தில் நடிப்பது உண்மையா? – நடிகை ஜோதிகா விளக்கம்

கே.ஜி.எப். இயக்குனரின் புதிய படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.

பிரபல கன்னட நடிகர் மது குருசாமி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சலார் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நடிகை ஜோதிகா, சலார் படத்தில் பிரபாசுக்கு சகோதரியாக நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கும் முன்னர் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், நடிகை ஜோதிகா இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!