கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நட்டி நட்ராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்த நட்டி நட்ராஜ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

கொரோனா 2வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நட்டி நடராஜன் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுக்களை பெற்ற கர்ணன் படத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக நடித்து இருந்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!