‘பண்டாரத்தி புராணம்’ பாடல் சர்ச்சை – இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்த அதிரடி முடிவு

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ந் தேதி ரிலீசாக உள்ளது.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படம் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ‘பண்டாரத்தி புராணம்’ என்ற பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் விதமாக உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதனால் படத்தை வெளியிட தடைகோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த பாடல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “பண்டாரத்தி புராணம்‌ பாடலுக்கு ஏற்பட்டிருக்கும்‌ விவாதத்தையும்‌ வருத்தத்தையும்‌ கோரிக்கையையும்‌ முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம்‌ என்று முடிவு செய்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!