மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’ – ஓ.டி.டி.யில் வெளியிட திட்டம்

பாகுபலி படத்தின் முதல் இரண்டு பாகங்கள், மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த படம் பாகுபலி. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2017-ல் வெளியான பாகுபலி படத்தின் 2-ம் பாகமும் வெற்றி பெற்றது. இந்த இரண்டு பாகங்களும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், பாகுபலி படத்தின் 3-ம் பாகத்தை இயக்க ராஜமவுலி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகுபலி 3-ம் பாகத்தை ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக எடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.

இதனை திரைப்படமாக எடுக்க அதிக வருடங்கள் பிடிக்கும் என்பதால் குறுகிய காலத்தில் படமாக்கி ஓ.டி.டி.யில் வெளியிடுகிறார்கள். பாகுபலி 3-ம் பாகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ராஜமவுலி தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் பாகுபலி 3-ம் பாகத்தை தொடங்க உள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!