பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ரன்பீர் கபூர், மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருகிறார்.

மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். இவரும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். மும்பையில் தனது தாயாருடன் வசித்து வரும் ரன்பீர் கபூர், கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சையும் எடுத்து வருகிறார். தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் அவரின் தாயார் நீத்து கபூர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரன்பீர் கபூர், பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட்டை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் இந்தாண்டு திருமணம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!