பிரபல நடிகையால் ஓவியாவுக்கு இப்படியொரு நிலைமையா..!! கடுப்பில் ஓவியா ஆர்மி..!!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய பெயர் மற்றும் புகழை பெற்றவர் நடிகை ஓவியா. மேலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தற்போது அவர் சில தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறது. அதன்படி அவர் தற்போது ராகவா லாரன்சுடன் காஞ்சனா 3 படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். வேறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.

இந்த நிலையில் யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் டீ.கே. இவர் அடுத்து ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் பேனர் தயாரிக்கும் காட்டேரி என்ற படத்தை இயக்க இருக்கிறார்.


இந்த படத்தில் புதுமுக நடிகர் ஆதி நாயகனாகவும் நாயகியாக ஓவியா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இப்போது படத்தின் நாயகன், நாயகி இருவரும் மாறிவிட்டதாக கூறப்படுகிறது.

அதாவது இந்த புதிய படத்தில் வைபவ், ஹன்சிகா இருவரும் தான் ஜோடியாக நடிக்க இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!