சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் கூறிய நடிகை ராதிகா- படு ஷாக்கில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் படங்களை தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சிகள் தான் அதிகம் மக்களிடம் வரவேற்பு பெறுகின்றன.

தொலைக்காட்சிகளும் மக்களின் ரசனைக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் புதிது புதிதாக ஒளிபரப்புகிறார்கள், சீரியல்களும் அதிகம் வருகின்றன.

அப்படி சின்னத்திரையிலும் நடித்து, தயாரித்து பல சீரியல்களை கொடுத்து அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டவர் நடிகை ராதிகா. அவர் நடிக்கும் சீரியல்கள் இப்போதும் மக்களிடம் பெரிய வரவேற்பை பெறுகின்றன.

தற்போது அவர் ஒரு நிகழ்ச்சியில், சின்னத்திரையில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டு தனது கணவருடன் அரசியல் பணியில் முழு நேரமும் ஈடுபடுவேன் என கூறியுள்ளார்.

சீரியல்களை அவரை ரசித்த ரசிகர்களுக்கு இது ஷாக்கிங் தகவலாக உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!