காஞ்சனா பட நடிகைக்கு கொரோனா

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் தமிழில் லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.

நேற்று இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்த ராய் லட்சுமி, “காலம் மாறிவிட்டது. நாம் அனைவரும் பாசிடிவ்-க்கு பதிலாக நெகட்டிவ் முடிவுகளை தான் எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டிருந்தார். கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதை தான் அவர் இவ்வாறு சூசகமாக பதிவிட்டுள்ளார் போல தெரிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!