அஜித் இடத்துல வேற நடிகர் இருந்துருந்த ஓடி போயிருப்பாங்க.. பிரபல தயாரிப்பாளரின் அதிரடி பேட்டி..

தமிழகத்தில் ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர் தல அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் இப்படத்தை நடித்து வருகிறார்.

தல அஜித்தை பற்றி பலரும் தங்களது கருத்துக்களை, பேட்டிகள் மூலம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது வான்மதி, காதல் கோட்டை உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அஜித்தை குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இதில் அவர் கூறியதாவது : தல அஜித்தை நான் ஒரு முறை, எனது படப்பிடிப்பில் பார்த்தேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு ஓரமாக படுத்து இருந்தார். நான் அவரிடம் சென்று கேட்டான். கொஞ்சம் முதுகு வலி என்று கூறினார். ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுத்த பிறகு தான் அவர் அங்கிருந்து கிளம்பினார்.

ஒரு மிகப்பெரிய நடிகர் என்றாலே, சிறிது காயம் ஏற்பட்டுவிட்டால் படப்பிடிப்பை நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் தனது ஆரம்பகால கட்டத்தில், தனது வலியையும் பொருட்படுத்தமால், படப்பிடிப்பை முடித்து கொடுத்தார்.

தல அஜித்தின் இடத்தில், அங்கு வேறு யாரவது இருந்திருந்தால், வேலையை ராஜனமா செய்துவிட்டு ஓடி இருப்பார். என தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!