விக்ரம் வீட்டில் வெடுகுண்டு! மிரட்டல் விட்ட மர்ம நபர்! போலிசார் அதிரடி சோதனை

கலவையான விமர்சனங்களை பெற்ற கடாரம் கொண்டான் படத்தில் கடந்த நடிகர் விக்ரம் ஐ பார்த்திருந்தோம். துருவ நட்சத்திரம், மஹாவீர் கர்ணா, பொன்னியின் செல்வன், சியான் 60 என பல படங்களை கையில் வைத்துள்ளார்.

ஆதித்யா வர்மா என்ற படத்தின் மூலம் தன் மகன் துருவ் ஐ ஹீரோவாக்கினார். அடுத்ததாக அப்பா மகனாக இருவரும் இணைந்து நடிக்கின்றனர். அவர் சென்னை பெசண்ட் நகர் பகுதியில் விக்ரம் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இன்னும் சில நிமிடங்களில் வெடித்து விடும் என கூறி மர்ம நபர் ஒருவர் நேற்று சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் கால் செய்துள்ளார்.

இதனால் வெடிகுண்டு கண்டரியும் பிரிவினருடன் போலிசார் உடனே அந்த வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால் அங்கிருந்து எந்த வெடி பொருளும் கைப்பற்றப்படவில்லை.

வதந்தி என்பதை அறிந்த போலிசார் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து தான் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது என்பதனை கண்டறிந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!