தனுஷிற்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டது இதனால் தான்..! நடிகை மாளவிகா மோகனன் கூறிய சுவாரஸ்ய தகவல்…

நடிகை மாளவிகா மோகனன் மிக குறுகிய காலத்திலே தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.

அதற்கு முக்கிய காரணமாக அமைந்ததே தனது முதல் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட, இரண்டாவது திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாறிவிட்டார்.

இப்படி முன்னணி நடிகர்களின் தொடர்ந்து ஒப்பந்தமாகி வரும் நடிகை மாளவிகா மோகனன், தற்போது தனுஷ் உடன் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர் கூறுகையில், தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிப்பதற்கு தன்னிடம் கொரோனா பாதிப்புக்கு முன்பே படக்குழுவினர் அணுகினர்.

ஆனால் அந்த நேரத்தில் தான் மூன்று படங்களில் கமிட் ஆகியிருந்ததால் கைவசம் அவர்கள் கேட்ட தேதி இல்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தான் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது.

இதனையடுத்து தனுஷ் படக்குழுவினர் மீண்டும் என்னிடம் அணுகிய போது தன்னிடம் தேதி இருந்ததாகவும், அதன்பின்னரே ஒப்பந்தமானேன் என்றும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!