பானா காத்தாடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சமந்தா. இதன்பின் நான் ஈ, கத்தி, 24, தெறி உள்ளிட்ட படங்கள் மூலம் முன்னணி நடிகையாக விளக்கியுள்ளார்.
தமிழில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகில் தற்போது வரை தனது சிறந்த நடிப்பினால் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
நடிப்பு ஒரு பக்கம் இருக்க, தற்போது தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்துள்ளார் நடிகை சமந்தா. ஆம் தெலுங்கில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சாம் ஜாம்’ எனும் உரையாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் முதல் விருந்தினராக நடிகர் விஜய் தேவர்கொண்டா வந்துள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் 10 எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 1.5 கோடி சம்பளமாக வங்கியுள்ளாராம் சமந்தா.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!