நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலி, தன்னுடைய நாய்க்குட்டிக்கு போட்டோஷூட் நடத்தி பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார்.

அங்காடித் தெரு படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அஞ்சலி. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிய அஞ்சலி, ஜெய், விமல், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக ஒப்பந்தமானார்.

நடிகை அஞ்சலிக்கு தனது நாய்க்குட்டி போலோ மீது அலாதி பிரியம். அதன் பிறந்தநாளுக்காக போட்டோஷூட் நடத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ” நீ என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகு நான் மிக மகிழ்ச்சியாகவும், ஆசீர்வதிக்கப் பட்டதாகவும் உணருகிறேன் என்றென்றும் நீ எனக்கு அன்புக்குரிய தோழன் ஆவாய்.

நீ எனக்கு அளவு கடந்த அன்பையும் நான் வீட்டுக்குள் நுழையும் போது நிறைய முத்தங்களையும் கொடுத்திருக்கிறாய், ஐ லவ் யூ போலோ” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!