இயக்குனர் ஹரியுடன் நடிகை நயன்தாராவிற்கு ஏற்பட்ட மோதல்.. வெளிவந்த ஷாக்கிங் தகவல்..

தமிழ் திரையுலகில் தற்போது மிக பெரிய உச்சத்தில் இருக்கும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை நயன்தாரா.

தற்போது இவர் முன்னணி நடிகையாக இருந்தாலும், இவரை கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஹரி.

ஆம் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் தான் நடிகை நயன்தாரா கதாநாயகியாக அறிமுகமானார்.

ஆனால் அதன்பிறகுஹரி இயக்கிய ஒரு படத்தில் கூட அவர் கதாநாயகியாக நடிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமே இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தானம்.

அது என்னவென்றால் ” ஐயா படத்தின் படப்பிடிப்பின் போது, இயக்குனர் ஹரிக்கும், நடிகை நயன்தாராவிற்கும், படத்தில் அணியும் ஆடை பற்றி வாக்குவாதம் தான் இவர்களின் விரிசலுக்கு காரணமாம் ” என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் தான் ஐயா படத்திற்கு பிறகு ஹரி இயக்கிய ஒரு படத்தில் கூட நயன்தாரா நடிக்கவில்லையாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!