இந்தி மொழி திணிப்பு, தனக்கு நேர்ந்த பிரச்சனை குறித்து முதன்முறையாக பேசிய யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர்களில் இளைஞர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இவருக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை.

ஆனால் அவரோ ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு தான் தனக்கு கிடைக்கும் விருதே என இருக்கிறார். அண்மையில் ஹிந்தி தெரியாது போடா என்ற உடை அணிந்து வெளியான அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், மதுரை விமான நிலையத்தில் ஹிந்தி தெரியவில்லை என்று என்னை சுற்றி வலைத்தனர்.

ஹிந்தி படங்களில் பணிபுரிந்துள்ளேன், பாடல்கள் பாடி இருக்கிறேன், நான் ஹிந்திக்கு எதிரானவன் இல்லை, அதை கட்டாயமாக்குவதற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.

மும்பை விமான நிலையத்தில் இருப்பவர்களை தமிழ் பேச சொன்னால் சரியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!