தீவிர சிகிச்சை பிரிவில் டொவினோ தாமஸ்… குணமடைய வேண்டுதல்

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த நடிகர் டொவினோ தாமஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகராகவும் இருக்கிறார்.

டொவினோ தாமஸ் தற்போது ‘கால’ (Kala) என்ற படத்தில் நடித்து வருகிறார். வி.எஸ்.ரோஹித் இயக்கும் இந்தப் படத்தில் திவ்யா பிள்ளை, லால் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கும் போது நடிகர் டொவினோ தாமஸூக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதனால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொவினோ தாமஸின் வயிற்றின் உட்பகுதியில் நுரையீரல் அருகே ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் இருந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையறிந்த பலர், டொவினோ தாமஸ் நலம் பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!