மது போதைக்கு அடிமையானாரா சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரகதி! அதிரடியான பதிவு

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாடகி பிரகதி. கடந்த 2012 ல் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் இரண்டு பாடல்களை பாடியிருந்தார். ராட்சசன், கண்ணே கலைமானே படங்களிலும் பாடியுள்ளார்.

இந்நிலையில் பிரகதி, மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக செய்திகள் வலம் வந்தன. இதுகுறித்து பிரகதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அயர்லாந்து நாட்டில் கின்னாஸ் ஃபாக்டரிக்கும் சென்றிருந்த போது ஒரு பீர் கிளாஸுடன் புகைப்படம் எடுத்ததை வைத்து நான் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபோல செய்திகளை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சொல்கிறார்கள். ஆனால் அந்தளவிற்கு அவற்றுக்கு மதிப்பு கிடையாது. எனக்காக, உங்களுடைய நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

பிரகதி இடையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது.

அதற்கான போட்டோஷுட் கூட முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்காமல் போனது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!