தல ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த படம்! நடிகரின் தகவலால் ஷாக்கான இயக்குனர்!

கொரோனா தணிந்து ஊரடங்கு தளர்வாகி படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதியளித்துள்ள நிலையில் அஜித் நடித்து வலிமை படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அஜித்தின் சினிமா பயணத்தில் 50 வது படமான மங்காத்தா மிக முக்கிய சாதனை செய்தை நாம் அனைவரும் அறிவோம் தானே. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

படத்தில் வில்லனாக அஜித் நடித்திருந்தது கூடுதல் ஸ்பெஷல். இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் சுப்பு பஞ்சு, 10 வருடத்திற்கு முன்னரே மங்காத்தா 2 படத்தின் கதையை வெங்கட் பிரபு எழுதிவிட்டார். அஜித் சார் ஓகே சொன்னால் படம் ரெடி என கூற ரசிகர்கள் இது குறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்க அவர் தன் எண்ணங்களை எமோஜியாக வெளியிட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் மங்காத்தா 2 படம் குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!