தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கார்த்தி.
இவர் தற்போது ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் இயக்கத்தில் சுல்தான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கு திரையுலகின் சென்சேஷன் நடிகையான ராஷ்மிகா மந்தன்னா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில், சுல்தான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கார்த்தி அடுத்து முத்தையா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் கொம்பன் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் வசூல் செய்து படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!