சூர்யாவின் அருவா ட்ராப்!! இயக்குனர் ஹரியின் அறிக்கையால் உறுதியானது..

தமிழ் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது சுதா கே. பிரசாத் இயக்கத்தில் நடித்துள்ள சூரரை போற்று படம் அமோசான் பிரைமில் வெளிவரவுள்ளது.

இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் வாடி வாசல் எனும் படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படம் சூர்யா நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது.

சமீபத்தில் ஹாரி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா நடிக்கவிருந்த அருவா படம் ட்ராப் ஆகிவிட்டது என சில வதந்திகள் பரவின.

இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக இயக்குனர் ஹரி சூர்யாவின் OTT ரிலீஸ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதில் உங்களின் இந்த முடிவை மீண்டும் ஒருமுறை மரு பரிசீலனை செய்யுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கை ஒன்றே இவர்களின் பிரிவினையை உண்மை தான் என்று 90% சதவீதம் முடிவு செய்துள்ளது என்று கூட சொல்லலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!