விஜய் இந்த விசயத்துக்காக குரல் கொடுக்க வேண்டும்! முக்கிய பிரமுகர் அதிரடி

விஜய்யின் புகைப்படங்கள் தான் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களை கலக்கி வருகின்றன. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு விஜய்க்கு மரம் நடும் சேலஞ்ச் விடுத்தார்.

இதனையொட்டி விஜய் தன் வீட்டில் மரக்கன்றுகளை நட்டு சவாலை முடித்துக்காட்டி புகைப்படங்களை வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கொண்டாடவைத்தன.

அதிகம் பேசாத விஜய் மேடையேறி பேசினால் அரங்கம் அதிர்வதோடு அரசியல் வட்டாரத்திலும் அதிர்வை ஏற்படுத்துவதுண்டு.

இந்நிலையில் விசிகவை சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் “மரம் நடுவது நற்செயல். அதைச் செய்வது சிறப்பு. அதே வேளை, இயற்கையாக வளர்ந்த வனங்களையும், நாம் நடும் மரங்களையும் பாதுகாப்பது முக்கியம். வளர்ச்சியின் பெயரால் வளங்களை அழிக்க வகை செய்யும் EIA2020-யை எதிர்த்து விஜய் குரல் எழுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!