சுஷாந்த் சிங் மரண விசாரணை! பல முறை மாற்றப்பட்டுள்ள விசயம் – ஆதாரங்கள் இதோ

பாலிவுட் சினிமாவின் பிரபல இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்றது.

18 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்தியிடம் 8 மணி நேரம் விசாரணனை செய்யப்பட்டது. மேலும் அவரின் தந்தை இந்தரஜித், சகோதரர் ரவி சக்ரவர்த்தி, பட்டய கணக்காளர் ஆகியோரிடம் நீண்ட நேர விசாரணை நடைபெற்றது.

இதில் சுஷாந்திடம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்வியில் ரியா மற்றும் ஆடிட்டர் கூறிய விசயங்களில் பல வேறுபாடுகள் இருந்துள்ளன.

மேலும் ரியா பல கேள்விகளுக்கு பதிலளிக்க வில்லையாம். அத்துடன் ரியாவின் தந்தைக்கு சொந்தமான நவி மும்பை பிளாட் பெயரில் சுஷாந்த் சிங் 2019 செப்டம்பரில் ஒரு நிறுவனத்தையும், 2020 ஜனவரியில் ஒரு நிறுவனத்தையும் பதிவு செய்துள்ளார்.

757 சதுர அடி கொண்ட இந்த இடத்தை ரியாவின் தந்தை ரூ 53 லட்சத்திற்கு வாங்கினாராம். மேலும் முத்திரையில் மதிப்பு ரூ 3 லட்சமாம். Reality.com என்ற இந்நிறுவனத்தின் IP முகவரி 17 முறை மாற்றப்பட்டுள்ளதாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!