தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், உச்ச நட்சத்திரங்களாக வும் திகழ்ந்து வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.
இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன் தங்களது திறைப்பயன தொடக்கத்தில் ராஜாவின் பார்வையிலே எனும் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
ஆனால் தற்போது இவ்விருவரும் ஏதாவது ஒரு படத்தில் இணைந்து நடிபார்களா என பல லட்ச ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இறுகிறனர்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு அளித்த பேட்டியில் இவ்விருவரையும் ஒன்றாக வைத்து படம் எடுப்பது குறித்து ருசிகர தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
இதில் அவர் கூறியது :
2010 ஆம் ஆண்டு மங்காத்தா படத்தில் தல அஜித்துடன் அர்ஜுன் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தை என்னிடம் கேட்டு இருக்கலாமே என்று தளபதி விஜய் என்னிடம் ஆதங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு எப்படியாவது தல அஜித் மற்றும் தளபதி விஜய்யை இணைத்து ஒரு படம் இயக்கி விட வேண்டும் என பல வருடமாக யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.
மேலும் ஒரு மாதிரி கதை ஒன்று உருவாகி இருக்கிறதாம். விரைவில் அதற்கான தீவிர வேலைகளில் இறங்க இருப்பதாகவும் சமீபத்திய வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!