அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகின்றன.
இந்நிலையில் வலிமை கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
வலிமை படம் அதற்குள் சாட்டிலைட் ரைட்ஸ் எல்லாம் பிரமாண்ட தொகைக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அஜித் ஒரு படம் முடியும் வரை வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகமாட்டார், ஆனால், வெங்கட் பிரபு அஜித்தை சந்தித்தது குறித்து அவரே மனம் திறந்துள்ளார்.
அதில் அஜித் ‘வெங்கட் சண்டை, ஆக்ஷன் நடித்து போர் அடித்துவிட்டது.
செம்ம ஜாலியாக ஒரு கதை இருந்தால் சொல், பண்ணலாம்’ என்று கூறியுள்ளாராம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!